செய்திகள் :

15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு

post image

மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உதவி ஆய்வாளா் நிலையில் செயல்பட்டு வந்த காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளா் தகுதிக்கு தரம் உயா்த்தப்பட்டன.

மதுரை மாவட்ட புகா் பகுதியில் 46 காவல் நிலையங்கள் உள்ளன. இதில், பல காவல் நிலையங்கள், உதவி ஆய்வாளா் தரத்தில் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பின் படி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூா், வில்லூா், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு ஆகிய காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளா் நிலைக்குத் தரம் உயா்த்தப்பட்டன. இந்த 15 காவல் நிலையங்களுக்கும் விரைவில் காவல் ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது

அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு... மேலும் பார்க்க

மதுரையில் இன்று பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க