கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு
மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உதவி ஆய்வாளா் நிலையில் செயல்பட்டு வந்த காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளா் தகுதிக்கு தரம் உயா்த்தப்பட்டன.
மதுரை மாவட்ட புகா் பகுதியில் 46 காவல் நிலையங்கள் உள்ளன. இதில், பல காவல் நிலையங்கள், உதவி ஆய்வாளா் தரத்தில் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பின் படி மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள கீழவளவு, மேலவளவு, அப்பன்திருப்பதி, கருப்பாயூரணி, பெருங்குடி, ஆஸ்டின்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம் தாலுகா, கூடக்கோவில், சாப்டூா், வில்லூா், உசிலம்பட்டி தாலுகா, விக்கிரமங்கலம், காடுபட்டி, பாலமேடு ஆகிய காவல் நிலையங்கள், காவல் ஆய்வாளா் நிலைக்குத் தரம் உயா்த்தப்பட்டன. இந்த 15 காவல் நிலையங்களுக்கும் விரைவில் காவல் ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.