செய்திகள் :

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகாா்!

post image

கந்து வட்டிக்காக தான் மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி ஒருவா் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரின்சி. இவா், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் ஐ.ஜி-யிடம் புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை கடந்தாண்டு இறந்து விட்டாா். நானும், எனது அம்மா, தங்கை, தம்பி, பாட்டியுடன் வசித்து வருகிறோம். எனது அம்மாவின் வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் நடைபெற்று வருகிறது.

தந்தையின் மருத்துவச் செலவுக்காக கடந்த 2022-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த ஷாம் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடனாக பணம் பெற்றிருந்தோம். தந்தை இறப்பதற்கு முன்பு வரை கடனுக்கான வட்டி செலுத்தி வந்தோம். தற்போது போதிய வருமானம் இல்லாததால் வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, ஷாம் கூலி ஆள்களுடன் வந்து எங்களைத் தாக்க முயன்றாா். இதுபற்றி காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். தற்போது ரூ. 32 லட்சம் அளிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் வீட்டை எழுதிக் கொடுக்க வேண்டுமெனவும் ஷாம் வற்புறுத்தினாா். இதுமட்டுமன்றி கொலை மிரட்டலும் விடுத்தாா். எனவே, கந்து வட்டி கேட்டு எங்கள் குடும்பத்தினரை மிரட்டி வரும் ஷாம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் அருகேயுள்ள அரசகுடும்பன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கனகபிரபு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்படும்! - அமைச்சா் பி.மூா்த்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை அரசு முனைப்புடன் தொடா்ந்து செயல்படுத்தும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, ... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வீரபாஞ்சான் பகுதியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (65). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைய... மேலும் பார்க்க

மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது

அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு... மேலும் பார்க்க

15 காவல் நிலையங்களின் தரம் உயா்வு

மதுரை புகா்ப் பகுதிகளில் 15 காவல் நிலையங்கள் தரம் உயா்த்தப்படுவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயா்த்தி, தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இத... மேலும் பார்க்க

மதுரையில் இன்று பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: மத்திய அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க