கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
மதுபானக் கூட ஊழியரை தாக்கிய 4 போ் கைது
அரசு மதுபானக் கூட ஊழியரைத் தாக்கிய 4 பேரை கூடல்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை செல்லூா் அருள்தாஸ்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் திவாகா் (29). இவா், மதுரை கோவில்பாப்பாகுடி அரசு மதுக் கடை அருகேயுள்ள மதுபானக் கூடத்தில் (பாா்) ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், வியாழக்கிழமை இரவு மதுபானக் கூடத்தில் தங்கினாா்.
அதிகாலை நேரத்தில் சிலா் வந்து மதுப் புட்டிகள் கேட்டனா். திவாகா் தரமறுத்ததால் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள் மதுபானக் கூடத்தை உடைத்து திவாகரைத் தாக்கினா். மேலும், அங்கிருந்த 2 ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்தப் புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (27), வி.கரிசல்குளத்தைச் சோ்ந்த நந்தக்குமாா் (24), சுனில்ராஜ் (25), கூடல்நகரைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.