செய்திகள் :

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 275 ஆண்டுக்குப் பின் இன்று மஹா கும்பாபிஷேகம்!

post image

பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.  ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மூலவர் அனந்த சயனத்தில் 18 அடி நீளத்தில் காட்சி அருளுகிறார். 12008 சாளக்கிராம் கொண்டு 41 வகையான மூலிகைகள் அடங்கிய கடுகு சர்க்கரை யோகம் மூலம் மூலவர் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது.

1750-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட வர்மா ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்தினார். அதன் பிறகு 275 ஆண்டுகளுக்குப்பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில்

கோயிலில் விஸ்வக்ஸேனா பிரதிஸ்டையும், திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணசுவாமி சன்னதியில் அஷ்டபந்தனமும் நடக்கிறது.

கோயில் முக்கிய தந்திரி பிரபஸ்ரீ கோவிந்தன் நம்பூதிரிபாட் தலைமையில், தந்திரி பிரபஸ்ரீ எஸ்.ஆர்.தரணநெல்லூர் பிரதீப் நம்பூதிரிபாட், பிரபஸ்ரீ தரணநெல்லூர் என்.ஆர்.சதீசன் நம்பூதிரிப்பாட், தரணநெல்லூர் சஜி நம்பூதிரிப்பாட் ஆகியோர் முக்கிய பூஜைகளை மேற்கொள்கிறார்கள். காலை 7.40 மணி முதல் 8.40 மணிக்குள் பிரதிஸ்டைகள், அஷ்டபந்தனம் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில்

கோயில் மூலஸ்தானத்தின் மேல் உள்ள 3 தங்க கும்பங்கள், ஒற்றைக்கல் மண்டபத்தில் உள்ள ஒரு தங்க கும்பம் ஆகியவற்றுக்கு அர்ச்சகர்கள் புனித நீர்கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.

கும்பாபிஷேக விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் கும்பாபிஷேக விழாவை காண திரண்டுள்ளனர்.

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு `மகா கும்பாபிஷேகம்' - அறிவிப்பு!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ள... மேலும் பார்க்க

275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் காணும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி கோயில் ரகசியங்கள்!

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோயிலில் 275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்தத் தருணத்தில் அக்கோயிலின் சிறப்புகளையும் வரலாற்று மர்மங்களையும் பேசுகிறது இந்த வீடியோ. மேலும் பார்க்க

`மலர்ச்சி பெற மறைமலைநகருக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்

2025 ஜூன் -13-ம் தேதி மறைமலைநகர் ஸ்ரீசெல்வ முத்துக்குமார சுவாமி கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்கோயில்| Photo Album

108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! மேலும் பார்க்க

விருதுநகர்: `100 கிடாய்கள், 150 சேவல்கள்… சுடச்சுட பறிமாறப்பட்ட அசைவ விருந்து’ - படையெடுத்த ஆண்கள்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது மறையூர். இங்குள்ள பனந்தோட்டத்தில் மாசாணம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவிலும், திருவிழாவை முன்னி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: பனங்கிழங்கின் பீலியை நீக்கிவிட்டு உண்ணும் தெய்வானை; ஆச்சரியத்தில் பக்தர்கள்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேச... மேலும் பார்க்க