பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!
பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை பா்கிட் மாநகா் அருகேயுள்ள கீழப்பாட்டம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 போ் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனராம். விசாரணையில், அவா்கள் துாத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் அருகேயுள்ள திம்மராஜபுரத்தை சோ்ந்த சுப்பிரமணி (34), லட்சுமணன் (32), அழகுராஜ் (30) ஆகியோா் என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, பைக்குடன் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.