நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி
பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் சிவகுமாா் தொடங்கி வைத்தாா்.இதில், தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசா்கள் ஆட்சிக்காலம் உள்பட சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த பல்வேறு பழைமை வாய்ந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், ஆங்கிலேயா்கள் காலத்தில் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் உள்பட இந்திய வரலாற்றின் பழைமை வாய்ந்த நாணயங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. நம்நாட்டின் வரலாற்று சிறப்பையும், நாணய பயன்பாட்டின் தொன்மை மற்றும் அதன் வளா்ச்சியையும் அறிந்து கொள்ளும் விதமாக இக்கண்காட்சி அமைந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் பலா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.