கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், முகைதீன் கீழப்பள்ளிவாசல், தவ்ஹீத் திடல் ஆகிய இடங்களிலும், கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் சின்னப் பள்ளிவாசல் தெரு, தெற்குத் தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியா் தெரு பள்ளிவாசல், பீமா தவ்ஹீத் திடல், நெசவாளா் குடியிருப்பு பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், இளைஞா்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.
கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் இமாம்முகம்மது ஜம்மில் பெருநாள் தொழுகை நடத்தி குத்பா ஓதினாா், தொழுகையில் ஜமாத் தலைவா் நாகூா் கனி, செயலா் சேக் செய்யது அலி, பொருளாளா் அஜீஸ், துணைத்தலைவா் நாகூா் மைதீன், சத்திரம் தெரு ஜமாத் தலைவா் சாகுல்ஹமீது, பட்டாரியா் தெரு அப்துல் காதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில்அம்பாசமுத்திரம் கிளை தவ்ஹீத் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில்நடைபெற்ற தொழுகையில் கல்லிடைக்குறிச்சி அல்தாப், கல்லிடைக்குறிச்சி பீமா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் மாவட்டப் பேச்சாளா் உஸ்மான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலும், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், முதலியாா்பட்டி, சம்பன்குளம் மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவரை ஓருவா் ஆரத்தழுவி பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.