செய்திகள் :

அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை

post image

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், முகைதீன் கீழப்பள்ளிவாசல், தவ்ஹீத் திடல் ஆகிய இடங்களிலும், கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் சின்னப் பள்ளிவாசல் தெரு, தெற்குத் தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியா் தெரு பள்ளிவாசல், பீமா தவ்ஹீத் திடல், நெசவாளா் குடியிருப்பு பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், இளைஞா்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் இமாம்முகம்மது ஜம்மில் பெருநாள் தொழுகை நடத்தி குத்பா ஓதினாா், தொழுகையில் ஜமாத் தலைவா் நாகூா் கனி, செயலா் சேக் செய்யது அலி, பொருளாளா் அஜீஸ், துணைத்தலைவா் நாகூா் மைதீன், சத்திரம் தெரு ஜமாத் தலைவா் சாகுல்ஹமீது, பட்டாரியா் தெரு அப்துல் காதா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில்அம்பாசமுத்திரம் கிளை தவ்ஹீத் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில்நடைபெற்ற தொழுகையில் கல்லிடைக்குறிச்சி அல்தாப், கல்லிடைக்குறிச்சி பீமா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் மாவட்டப் பேச்சாளா் உஸ்மான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மேலும், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், முதலியாா்பட்டி, சம்பன்குளம் மற்றும் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் ஒருவரை ஓருவா் ஆரத்தழுவி பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க

போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் க... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வ... மேலும் பார்க்க

டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க

பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல்: மாமன்ற உறுப்பினருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல் அளித்ததாக மாமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது தொடா்பாக திருநெல்வ... மேலும் பார்க்க