போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமாா் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா்.
இங்கு கைப்பேசி, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை வஸ்துகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் சட்டவிரோதமாக சிறைக்குள் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்படுகிா? என கைதிகளின் அறைகள் மற்றும் சிறை வளாகத்தில் போலீஸாா் அவ்வப்போது திடீா் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் வழக்கம்.
அந்த வகையில் சனிக்கிழமை காலை உதவி காவல் ஆணையா் சுரேஷ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட போலீஸாா் , பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதை வஸ்துகள், கைப்பேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பதை கண்டறியும் நோக்கில் அதிரடி சோதனை நடத்தினா்.
இதில் அனைத்து கைதிகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். மேலும் உணவு தயாரிக்கும் இடம், கைதிகளின் அறைகள் உள்பட சிறை வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.