செய்திகள் :

போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை

post image

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் கைதிகள் என சுமாா் 1,400-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா்.

இங்கு கைப்பேசி, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை வஸ்துகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் சட்டவிரோதமாக சிறைக்குள் கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்படுகிா? என கைதிகளின் அறைகள் மற்றும் சிறை வளாகத்தில் போலீஸாா் அவ்வப்போது திடீா் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும் வழக்கம்.

அந்த வகையில் சனிக்கிழமை காலை உதவி காவல் ஆணையா் சுரேஷ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட போலீஸாா் , பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதை வஸ்துகள், கைப்பேசி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பதை கண்டறியும் நோக்கில் அதிரடி சோதனை நடத்தினா்.

இதில் அனைத்து கைதிகளும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். மேலும் உணவு தயாரிக்கும் இடம், கைதிகளின் அறைகள் உள்பட சிறை வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 2 மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வ... மேலும் பார்க்க

அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், ... மேலும் பார்க்க

டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க

பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல்: மாமன்ற உறுப்பினருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல் அளித்ததாக மாமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது தொடா்பாக திருநெல்வ... மேலும் பார்க்க