செய்திகள் :

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

post image

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம் மதுரை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து சுற்றுச்சாலை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கினாா்.

இந்நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை காலை தெற்காவணி மூல வீதி வழியாக சென்றாா்.

2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா

அப்போது, மதுரை ஆதீன மடத்தின் அருகே வந்தபோது, ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வரவேற்பதற்காக காத்திருந்தாா். இதைப்பாா்த்த அமித் ஷா, காரில் இருந்து இறங்கியதையடுத்து, அப்போது அமித் ஷாவுக்கு, மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றாா்.

பின்னா் மதுரை ஆதீனத்தின் மூலமாக வெளியாகும் ’தமிழாகரன்’ இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும், மனு ஒன்றையும் மதுரை ஆதீனம் வழங்கினாா். இதைப்பெற்றுக் கொண்ட அமித்ஷா, நன்றி தெரிவித்துவிட்டு கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

இதுகுறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், இலங்கையில், இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இந்திய மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி இருக்கிறேன். அவா் நல்ல முடிவு எடுப்பாா் என நம்புகிறேன்‘ என்றாா்.

எத்தனை "ஷா" வந்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது: ஆர்.எஸ்.பாரதி

தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை “ஷா” கள் வந்தால... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளை குறைக்க பாஜக அரசு சதி: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமி... மேலும் பார்க்க

தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாகவும், நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் ... மேலும் பார்க்க

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.இது குறி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் பயன்பாட்டில் இல்லாத மின்கம்பம் விழுந்து முதியவர் பலி

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரிய கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை மரம் வெட்டும்போது பயன்பாட்டில் இல்லாத மின் கம்பம் சாய்ந்தில் முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ... மேலும் பார்க்க