பாஜகவை தோலுரித்துக் காட்டியுள்ளார் ராகுல் காந்தி: சிவசேனை தலைவர் சஞ்சய் ராவத்
மும்பை: மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்தை வெளிப்படுத்தி பாஜகவை விமர்சித்துள்ளார். சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் பாஜகவையும் மத்திய அரசையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருபவர்.
இந்த நிலையில், மகாராஷ்டிர தேர்தலில் பாஜக முறைகேடு செய்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து எழுதிய கட்டுரை தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், நாளிதழ்கள் பலவற்றில் வெளியான ராகுல் காந்தியின் கட்டுரை இவ்வுலகில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை பூண்டிருந்த மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சஞ்சய் ராவத், ராகுல் காந்தி ஒரு தனித்துவமிக்க மனிதர் என்றும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.