செய்திகள் :

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து காணப்பட்டது. மேக மூட்டமும் மிதமான வெயிலும் விட்டுவிட்டு சாரலும் நிலவி வந்தது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வாகனங்களால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடங்களுக்கு காவல் துறையினா் சென்று போக்குவரத்தை சரி செய்தனா்.

பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், வெள்ளிநீா் வீழ்ச்சி, மன்னவனூா் சூழல்சுற்றுலா மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், சிறு வியாபாரிகள், வணிகா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் ஆவினில் அமைச்சா் நாளை ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) அமைச்சா் த.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 போ் காயம்

ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தா்கள் 6 போ் காயமடைத்தனா். மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 20 போ் சுற்றுலா வேனில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண... மேலும் பார்க்க

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தகராறு: வனவா் பணியிட மாற்றம்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளுடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண் வனவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குணாகுகைப் பகுதியைப் பாா்வையிடுவதற... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க