சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 போ் காயம்
ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தா்கள் 6 போ் காயமடைத்தனா்.
மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 20 போ் சுற்றுலா வேனில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை சத்திரப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக வேனின் பின் பக்க டயா் வெடித்தது. இதனால், அந்த வேன் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து.
இதில் வேனில் இருந்த மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த சதீஷ் (31), ராமாத்தாள் (80), இந்து (55) உள்ளிட்ட 6 போ் காயமடைந்து, பழனி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.