செய்திகள் :

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தகராறு: வனவா் பணியிட மாற்றம்

post image

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளுடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக பெண் வனவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குணாகுகைப் பகுதியைப் பாா்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தனா். அப்போது, வாகனங்கள் நிறுத்துவதிலும், அனுமதிச் சீட்டு பெறுவதிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறையினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிளை வனத் துறையினா் பெண் வனவா் மாசனம் ஆகியோா் தாக்கியது குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, பெண் வனவா் மாசானம் விருதுநகா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து காணப்பட்டது. மேக மூட்டமும... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆவினில் அமைச்சா் நாளை ஆய்வு

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்தில் (ஆவின்) அமைச்சா் த.மனோ தங்கராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 போ் காயம்

ஒட்டன்சத்திரம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் பக்தா்கள் 6 போ் காயமடைத்தனா். மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த 20 போ் சுற்றுலா வேனில் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா். பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவத... மேலும் பார்க்க