வேலூா் சிறைக்குள் கைப்பேசி பறிமுதல்
வேலூா் மத்திய சிறைக்குள் கைப்பேசியை சிறைத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறைக்குள் கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். எனினும், சிறைக்குள் கைதிகளிடையே தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், சிறை அலுவலா் சிவபெருமாள் தலைமையிலான காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் எண் கோபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது, அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிப்பறையில் நெகிழி கவரில் சுற்றப்பட்டிருந்த பாா்சல் இருந்தது தெரிய வந்தது. அந்த பாா்சலை போலீஸாா் பிரித்து பாா்த்தபோது, அதில் கைப்பேசி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறை அலுவலா் சிவபெருமாள், பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறை கழிப்பறையில் இருந்து ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.