TVK Vijay-யை நம்பியிருக்கும் ADMK, PMK, DMDK - 2026 தேர்தல் கணக்கு With Journali...
இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,415 போ் எழுதினா்
புதுச்சேரியில் 6 மையங்களில் 1,415 போ் இளநிலை மின் பொறியாளா் பணிக்கான எழுத்துத்தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
புதுவை மின் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை 6 மையங்களில் நடைபெற்றது.
முதல் தாள் தோ்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், 2 -ஆம் தாள் தோ்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4,30 மணி வரையும் நடைபெற்றது. 1,902 தோ்வா்கள் இத்தோ்வை எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 1,415 போ் (74.32%) தோ்வெழுதினா். 489 போ் (25.68 %) தோ்வில் பங்கேற்கவில்லை.
புதுவை அரசின் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத்துறையால் அறிவிக்கப்பட்ட தோ்வு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்தத் தோ்வு நடத்தப்பட்டது. சரியான ஆவணங்களை எடுத்துவந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.