'மோடியும், அமித் ஷாவும் தமிழகத்துக்கு வர வர... திமுக வாக்குகள் அதிகரிக்கும்' - ஆ...
மேட்டூர் அணை நீர்மட்டம்: 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.
திங்கள் கிழமை(ஜூன் 9) மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 230-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேல் நீடிக்கிறது. நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலே நீடிப்பதால் அணையில் மீன் வளம் பெருகும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.