செய்திகள் :

தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

post image

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி(29) மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், மே 23 ஆம் தேதி அவர்கள் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியாததால் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

சடலமாக மீட்பு

காணாமல் போன தம்பதியினரைக் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வெய்சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் ரகுவன்ஷி உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் கையிலிருந்த மோதரமும் காணாமல் போனதால் கொலையாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. இதனிடையே, அப்பகுதியில் ரத்தக் கறை படிந்த கத்தி மீட்கப்பட்டது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு பள்ளத்தாக்கு அருகே மவ்க்மா கிராமத்தில் தம்பதியினர் அணிந்திருந்த மழைக்கோட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சோனமை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

கடைசியாக பார்த்தவர்களின் வாக்குமூலம்

மவ்லக்கியத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டி ஆல்பர்ட் பிடே, கடந்த சனிக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மே 23 அன்று காலை 10 மணியளவில் மவ்லக்கியத்தில் இளம் தம்பதியினர் மூன்று ஆண்களுடன் சென்றதைக் கண்டதாகவும் அவர்களுடன் சென்ற மூவரும் உள்ளூர் நபர்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

சோனம் கைது

உத்தரபிரதேசத்தின் காஜிபூர் சாலையில் சோனத்தை நேற்றிரவு காவல்துறையினர் கண்டறிந்ததாகவும், அவரே சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாகவும் மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காவல்துறையின் இரவு சோதனையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும், ரகுவன்ஷியை கொலை செய்வதற்கு சோனம் பணம் அளித்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகவும் மேகாலயா டிஜிபி தெரிவித்துள்ளார்.

கைதான சோனம் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதி.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மேகாலயா முதல்வர்,

”ஒரு வாரத்தில் மூன்று குற்றவாளிகளை மேகாலயா காவல்துறையினர் கைது செய்திருப்பது வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் சரணடைந்துள்ள நிலையில், மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெறுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

மேகாலயா காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ரகுவன்ஷி மற்றும் சோனத்தின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவும் வழக்கை சிபிஐக்கு மாற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச... மேலும் பார்க்க

செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியின் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளி... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதல்: ஏஎஸ்பி மரணம்; காவலர்கள் பலர் காயம்!

சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கோண்டா-எரபோரா சாலையில் உள்ள ... மேலும் பார்க்க