செய்திகள் :

செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

post image

உலகின் மிக உயரமான ரயில் பாலமாக கட்டப்பட்டுள்ள செனாப் பாலத்தின் கட்டுமானத்துக்கு சென்னை ஐஐடியின் முனைவர் பட்டம் பெற்ற மாதவி லதா முக்கிய பங்காற்றியுள்ளார்.

காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது.

இதில், ரியாசி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கௌரி பகுதிக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியை கடப்பதற்காக பாலம் கட்டும் பணிக்கு 2003 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனிடையே, பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய சில நாள்களிலேயே புவியியல் சூழலைக் கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது.

புவியியல் ரீதியிலான பாலத்தின் உறுதித்தன்மை ஆராய்ந்த பிறகு, 2010 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின.

இந்த நிலையில், நாட்டின் நவீன பொறியியல் அதிசயமாக உருவெடுத்துள்ள செனாப் பாலம் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

1,315 மீட்டா் நீளம் கொண்ட செனாப் பாலமானது 359 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம், பிரான்ஸில் உள்ள ஈபிள் டவரின் உயரத்தைவிட (330 மீட்டர்) அதிகம்.

யார் இந்த மாதவி லதா?

இந்த பாலத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, புவியியல் ரீதியிலான இதன் கட்டமைப்புதான். காற்று, நிலநடுக்கங்கள், வெள்ளம் போன்ற அனைத்து சூழலையும் தாங்கும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்கள் மிக்க செனாப் பாலத்தின் புவி தொழில்நுட்ப ஆலோசகராக 17 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் மாதவி லதா.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி லதா, காக்கிநாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பி.டெக்., வாரங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்.டெக். முடித்துவிட்டு, சென்னை ஐஐடியில் புவி தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

செனாப் பால பணிகளை பார்வையிடும் மாதவி லதா (கோப்புப்படம்)

தற்போது, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செனாப் பாலத்தின் கட்டமைப்பை மேற்கொண்ட முக்கிய ஒப்பந்ததாரரான ஆஃப்கான் நிறுவனத்துடன் இணைந்து, சிக்கலான புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளைச் சமாளிப்பதற்கான முக்கிய ஆலோசனைகளை தொடர்ந்து 17 ஆண்டுகளாக ஆராய்ந்து மாதவி வழங்கி வந்துள்ளார்.

சரிவுகள் ஏற்படாமல் பாறைகளை வைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும், செனாப் ரயில் பாலம் கட்டுமானம் தொடர்பாக ஆய்வறிக்கையையும் இந்திய புவி தொழில்நுட்பத்திற்காக எழுதியுள்ளார்.

விருதுகள்

தொழில்நுட்பத் துறையில் தொடர்ச்சியான இவரது சாதனைகளை கெளரவிக்கும் வகையில், சிறந்த பெண் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருதை இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால் 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதை கொண்டாடு வகையில், அறிவியல் (S), தொழில்நுட்பம் (T), பொறியியல் (E), கலை (A) மற்றும் கணிதம் (M) ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை ஸ்டீம் (STEAM) என்ற பெயரில் 75 இந்திய பெண்கள் கெளரவிக்கப்பட்டனர். அதில், மாதவி லதாவும் ஒருவர்.

மாதவி லதாவின் சாதனைகளைக் குறிப்பிட்டு ஆந்திர பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பாலியல் ‘சார்’-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழு... மேலும் பார்க்க

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயில் விபத்துகளில் 20 ஆண்டுகளில் 51,000 பேர் மரணம்!

மும்பை: மும்பை புறநகர் ரயில்களில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் கடந்த 20 ஆண்டுகளில் 51,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச... மேலும் பார்க்க