செய்திகள் :

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

post image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.

பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ஆட்சியின் 11 ஆண்டு சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை நிகழ்ந்த மும்பை புறநகர் ரயில் விபத்தை குறிப்பிட்டு, மோடி அரசின் ஆட்சியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மோடி அரசு தனது 11 ஆண்டுகால "சேவையை” கொண்டாடும் வேளையில், மும்பையிலிருந்து வரும் துயரச் செய்தி நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. பலர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளனர்.

நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய ரயில்வே, இன்று பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் குழப்பத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே.

2025 பற்றி பேசுவதை அரசு நிறுத்திவிட்டு, 2024-க்கான கனவுகளை விற்று வருகின்றது. இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளை யார் பார்ப்பது?

மும்பை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாணேவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் நெரிசல் காரணமாக தவறி விழுந்த 5 பேர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடம... மேலும் பார்க்க

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழு... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்... மேலும் பார்க்க