செய்திகள் :

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு!

post image

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதன்படி திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அக்கட்சித் தலைவர் கமலஹாசனும் வேட்புமனு கொடுத்துள்ளார்.

அதிமுக சார்பில் தனபால், ஐ.எஸ் இன்பதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து நாளை (ஜூன் 10) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. ஜூன் 12-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இவர்களுடன் சுயேச்சைகள் 7 பேர் போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

இதனால் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | என்ன பயம்? சிரிப்புதான் வருகிறது; அமித் ஷாவும் மோடியும் சாதாரணமான ஆள்கள்: ஆ. இராசா

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ரூ. 10,000-க்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலை பரவலாக வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்... மேலும் பார்க்க

திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரகுபதி

திமுக அரசைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி ... மேலும் பார்க்க