செய்திகள் :

பொதுத்துறை வங்கி குறியீடு 2% உயர்வு!

post image

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.5 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து 7,210 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஜூன் 6 அன்று ரிசர்வ் வங்கி அதன் பணவியல் கொள்கை கூட்டத்தின் முடிவை அறிவித்த பிறகு பங்குகளின் விலைகளில் வெகுவாக ஏற்றம் கண்டு வருகிறது.

ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க முடிவு செய்தது அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் ரொக்க இருப்பு விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் கொண்ட நான்கு தவணைகளில் 100 அடிப்படை புள்ளிகளாகவும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுத்துறை வங்கி அமைப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி வர வாய்ப்புள்ளதாக தெரியவந்தது.

இன்று பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் உயர்ந்து ரூ.129 ஆகவும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து ரூ.57 ஆகவும் வர்த்தகமானது. இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகள் தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, சென்ட்ரல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆஃப் இந்தியா ஆகியரின் பங்குகள் தலா 1 சதவிகிதத்திற்கும் மேலாகவும் உயர்ந்து முடிந்தன.

இதற்கிடையில் பாங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூகோ வங்கி பங்குகள் ஓரளவு உயர்ந்து முடிந்தன.

பணவியல் கொள்கை குழு முடிவுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஆளுநர் மல்ஹோத்ரா, ரொக்க இருப்பு விகிதம் குறைப்புக்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்தார். முதல் நோக்கம் பணப்புழக்கத்தை வழங்குவதும் இரண்டாவது நோக்கம் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வங்கிகளுக்கான நிதி செலவையும் இது வெகுவாக குறைக்கும் என்றார்.

தனியார் வங்கிகளின் பங்குகளும் இன்று உயர்ந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது. இதற்கு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் அந்நிய நிதி வரத்து... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

மும்பை: உலக சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் 50 அடிப்படை புள்ளிகள் வீதக் குறைப்புக்குப் பிறகு முதலீட்டாளர்களின் உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் கு... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று(ஜூன் 9) காலையில் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669-இல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10-இல் வர... மேலும் பார்க்க

ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!

புது தில்லி: நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவி அமர்த்தப்படுவதாக இந்திய ஆயுள் காப்பீட்ட... மேலும் பார்க்க

சைஃப்கோ சிமென்ட்ஸின் 60% பங்குகளை கைபற்றிய ஜே.கே சிமென்ட்!

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமென்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமென்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்... மேலும் பார்க்க

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை குறைந்தது!!

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குற... மேலும் பார்க்க