ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!
புது தில்லி: நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவி அமர்த்தப்படுவதாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின், நிதி சேவை துறை, ஜூன் 7, 2025 தேதியிட்ட கடிதத்தின் மூலம், இன்று முதல் செப்டம்பர் 7, 2025 வரை இந்த பதவியில் அவர் இருப்பவர் என்றது.
தற்போது உள்ள 4 எல்ஐசி நிர்வாக இயக்குநர்களில் சத் பால் பானு மூத்தவர் என்றும் ஜூன் 7, 2025 அன்று எல்ஐசி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த பணியிடம் நிரப்பப்பட்டது.
மொஹந்தி 1985ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனத்தில் பயிற்சி அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சைஃப்கோ சிமெண்ட்ஸின் 60% பங்குகளை கைப்பற்றிய ஜே.கே சிமெண்ட்!