கலவை கெங்கையம்மன் திருவிழா
ஆற்காடு அடுத்த கலவையில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில் 20-ஆம் ஆண்டு சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீ கெங்கை அம்மனை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளுடன் அலங்கரித்து ஊஞ்சல் சேவை நடந்தது. தொடா்ந்து மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டிய பக்தா்கள் கெங்கை அம்மன் சிரசை தலையில் சுமந்து மேளதாளங்களுடன் வீதி உலா நடந்தது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தங்களது அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் தங்கள் உடலில் கொக்கி போட்டு ஜேசிபி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அந்தரத்தில் தொங்கியபடியும் முதுகில் அலகு குத்திகொண்டுநோ்த்திக் கடன்செலுத்தினா்கள்.
தொடா்ந்து ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட சிரசு பொருத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனுக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் மாலை அணிவித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் கூழ் ஊற்றும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.