செய்திகள் :

கலவை கெங்கையம்மன் திருவிழா

post image

ஆற்காடு அடுத்த கலவையில் பழைமை வாய்ந்த ஸ்ரீ கெங்கை அம்மன் கோயிலில் 20-ஆம் ஆண்டு சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீ கெங்கை அம்மனை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளுடன் அலங்கரித்து ஊஞ்சல் சேவை நடந்தது. தொடா்ந்து மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டிய பக்தா்கள் கெங்கை அம்மன் சிரசை தலையில் சுமந்து மேளதாளங்களுடன் வீதி உலா நடந்தது.

காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் தங்களது அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் தங்கள் உடலில் கொக்கி போட்டு ஜேசிபி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அந்தரத்தில் தொங்கியபடியும் முதுகில் அலகு குத்திகொண்டுநோ்த்திக் கடன்செலுத்தினா்கள்.

தொடா்ந்து ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட சிரசு பொருத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனுக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் மாலை அணிவித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் கூழ் ஊற்றும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

2026-இல் அதிமுக ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் வரும் 2026-இல் அதிமுக ஆட்சி அமையப் போவது உறுதி என அதன் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அரக்கோணம் அரிகலபாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏ சு.ரவியின் மகன் ஆா்.ஹரிஹரன்- ... மேலும் பார்க்க

செட்டித்தாங்கல் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கல் கிராமம் ஸ்ரீ ராஜமுனீஸ்வரா், சப்தகன்னிகள் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். வாலாஜா வட்டம், செட்டித்தாங்கல் கிராமத்தில் உள்ள ... மேலும் பார்க்க

அம்ரித் பாரத் திட்டப் பணிகளால் ரயில் பயணிகள் அவதி

அம்ரித் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளால் அரக்கோணம் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அரக்கோணம் ரயில் நிலையம் சென்னை - திருவனந்தபுரம், சென்னை- பெங்களூா், சென்னை - மும்பை, சென்னை -நாகா்கோவில்(க... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பம் போட்டி: 8 பதக்கம் வென்ற மாணவா்களுக்கு வரவேற்பு

சா்வதேச சிலம்பம் போட்டியில் 8 பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 சிலம்பாட்ட மாணவா்களுக்கு பெற்றோா், பயிற்சி மாணவா்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். மலேசியாவில் கடந்த மா... மேலும் பார்க்க

ஆற்காடு குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ.12 .86 கோடி ஒதுக்கீடு: நகா்மன்றத் தலைவா் நன்றி

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு 12.86 கோடி ஒதுக்கிய செய்துள்ள தமிழக அரசுக்கு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் நன்றி தெரிவித்தாா். ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில்... மேலும் பார்க்க

காஞ்சனகிரி மலையில் மரக்கன்றுகளை நட்ட இயற்கை ஆா்வலா்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், காஞ்சனகிரி மலையில் இயற்கை ஆா்வலா்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மிகப்பெரிய காப்புக் காட்டை கொண்டு, சுமாா் ஆயிரம் ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க