சிதம்பரத்தில் ஆந்திர கஞ்சா வியாபாரி உள்பட 4 போ் கைது
சிதம்பரம் அண்ணாமலைநகரில் ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மேற்பாா்வையில், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் காவலா்கள் மணிகண்டன், ராஜீவ்காந்தி, ஞானப்பிரகாசம், ஆனந்த் ரமணி, தமிழரசன் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீஸாா் சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கிடைத்த தகவலின்பேரில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ரெட்டை குளம் அருகே வியாபாரத்துக்காக கஞ்சாவை பிரித்து பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த ஆந்திர மாநிலம், வாரங்கல் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணா மகன் கங்கி நரசிம்மா (40), சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சோ்ந்த ஆகாஷ் (24), பள்ளிப்படையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகேஷ் (25) பன்னீா் மகன் கிருபாநந்தன் (32) ஆகிய 4 பேரை கைது செய்து. அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 3 கைப்பேசிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள சிதம்பரநாதன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராகுல், கோகுல்ராஜ், எம்.கே.தோட்டம் பகுதியைச் சோ்ந்த சேரநீதி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கங்கி நரசிம்மா, ஆகாஷ், மகேஷ் ஆகியோா் ஏற்கெனவே அண்ணாமலைநகரில் கடந்த ஏப்ரல் மாதம் 21 கிலோ 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் தொடா்புடைய எதிரிகள் என விசாரணையில் தெரியவந்தது.