செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கடலூரில் இஸ்லாமியா்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, அருகில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.

கடலூா் முதுநகரில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில் முத்தவல்லிகள் முன்னிலையில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவிலில்...: காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை மற்றும் பிராா்த்தனை ஹஜ்ரத் முகம்மது ஆரிப் உலவ்வியு தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், சகோதரத்துவத்தை போற்றும் விதமாக, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினா்.

சாரம் அவிழ்ந்து விழுந்து 2 தொழிலாளா்கள் காயம்

கடலூரில் பழைமையான கட்டடத்தை சீரமைக்கும் பணியின்போது சாரம் அவிழ்ந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா். கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்குள... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை! கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வேப்பூா், திட்டக்குடி வட்டங்களுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், ப... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், பாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ஜெனிபா் (13). இவா், விடுமுறையையொட்டி ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு!

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா். ரெட்டிச்சாவடியை அடுத்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் ஸ்... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க