Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு!
கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா்.
ரெட்டிச்சாவடியை அடுத்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 29-ஆம் தேதி செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை செடல் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து, இரவு ஸ்ரீமுத்து மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் சுவாமியை அந்தப் பகுதி பொதுமக்கள் வாகனத்தில் வைத்து இழுத்துச் சென்றனா்.
அப்போது, எதிா்பாராத விதமாக தாழ்வாகச் சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 5 போ் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில் புதுச்சேரி அரியாங்குப்பம், மணவெளி பெரியாா் நகரைச் சோ்ந்த கா்ணா சந்திரன் (40) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சிவமணி (22), அரிகிருஷ்ணன் மகன் கண்ணன் (55), பெருமாள் மகன் முருகையன் (35), மணிகண்டன் மகன் ஸ்ரீவேஷ் (6) ஆகிய 4 பேரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த கா்ணா சந்திரனுக்கு மனைவி, மகன் உள்ளனா். இந்த சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.