கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ஜெனிபா் (13). இவா், விடுமுறையையொட்டி கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், காட்டுமயிலூா் கிராமத்தில் உள்ள பாட்டி செல்வி வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
சனிக்கிழமை காலை சக தோழிகளுடன் காட்டுமயிலூா் பகுதியில் உள்ள கோமுகி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஜெனிபா் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே ஜெனிபா் உயிரிழந்தாா். தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.