மாணவிக்கு பாலியல் தொல்லை: 'இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்...
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று(ஜூன் 9) காலையில் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669-இல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10-இல் வர்த்தகமாகிறது.
கடந்த வாரத்தின் இறுதி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன. அதன் தாக்கம், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் காணப்படுகிறது.