செய்திகள் :

தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி!

post image

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வுபெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஐஆர்எஸ் பணியில் இருந்து இவரை மத்திய அரசு விடுவித்தது.

இந்த நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அருண்ராஜுக்கு மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ”இவர் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கட்சிக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல், அதிமுக, திமுக கட்சிகளின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதி உள்ளிட்ட பலர் தவெகவில் இன்று இணைந்துள்ளனர்.

புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:

1. ஆர். ராஜலட்சுமி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

2. எஸ். டேவிட் செல்வன், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்

3. ஏ. ஸ்ரீதரன், திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

4. என். மரிய வில்சன், நிர்வாக அறங்காவலர், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை, தலைவர், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி

5. சி. சுபாஷ், முன்னாள் நீதிபதி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் சர்வீஸ், சென்னை

இதையும் படிக்க : செனாப் பாலத்துக்கு முக்கிய பங்காற்றிய மாதவி லதா! யார் இவர்?

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலை பரவலாக வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்... மேலும் பார்க்க

திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரகுபதி

திமுக அரசைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்? - ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்!

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று(திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதா... மேலும் பார்க்க