செய்திகள் :

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

post image

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்துக்கு தனது கணவருடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார் அப்பெண் ஊழியர்.

அந்த மனுவில், ``நான் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கடந்த 10-2-2025 அன்று முதல் பணியில் இருந்துவருகிறேன். அங்கு அலுவலக (நிர்வாகம்) கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரி, நான் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒன்றரை மாதம் வரை எனக்கு அலுவலக பணி எதுவும் ஒதுக்காமல், `நான் அழைக்கிறப்ப மட்டும் வந்து, நான் சொல்ற வேலையை செய்’ என்று இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் பேசுகிறார்.

புகார் அளிக்க வந்த பெண்

மேலும், `இந்த அலுவலகத்தில் நான் இருக்கிறவரை உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ எனவும் அருவறுக்கத்தக வகையில் பேசுகிறார். வேலை இருப்பதாக அறைக்குள் அழைத்தும் ஒன்றரை மணி நேரமாக எதுவும் பேசாமல் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். நான் `என்ன பணி இருக்கிறது சார்... சொல்லுங்க செய்கிறேன்?’ என்று கேட்டாலும், `சும்மா நில்லு. உனக்கு என்ன கஷ்டம்’ எனக் கூறிவிட்டு, அவர் உற்றுப் பார்த்து அறுவறுக்கத் தக்க செயல்களையே தொடர்ந்து செய்கிறார்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலரிடம் கூறினேன். அதற்கு `ஏம்மா, நீ இன்னும் பணி நிரந்தரமே ஆகல. உயரதிகாரிகள் சொல்படி கேட்டால் தானேம்மா எல்லாம் நல்லபடியாக இருக்கும்’ எனக் கூறுகிறார். நாளாக நாளாக கண்காணிப்பாளரின் பாலியல் சீண்டல்களும், பேச்சுகளும் அதிகரித்து வருகிறது. எனவே, எனக்கு வேலைக்கு செல்ல பயமாகவும், பதற்றமாகவும் இருக்கிறது. எனது தரப்பு நியாயத்தை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அச்சமின்றி பணிபுரிய எனக்கு பணி பாதுகாப்பு வழங்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

பெண் ஊழியரின் இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

புகார்

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அப்பெண், ``என் அம்மா கிராம சுகாதார செவிலியராக இருந்தார். பணியின்போது அவர் உயிரிழந்துவிட்டதால், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி எனக்கு வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து மூன்றரை மாதம்தான் ஆகிறது. அதற்குள்ளாக என்னுடைய மேலதிகாரியான அந்த கண்காணிப்பாளர், பாலியல் ரீதியாக நிறைய தொல்லைகள் கொடுக்கிறார்.

என்னை அவரின் அறையில் நிற்க வைத்து அரைக்கண்ணில் பார்ப்பது, குறுகுறுவென பார்ப்பது என பாலியல் ரீதியாக பேசுகிறார். `இந்த மாதிரி டிரஸ் போடாதீங்க... அந்த மாதிரியான டிரஸ் போடுங்க. புடவை தான் உங்களுக்கு நல்லா இருக்கு’ என்று பேசும்போது, எனக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. வேலையை விட்டுவிடலாம் என நினைத்தேன். ஆனால், அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற ஆதங்கத்தில்தான் இப்போது புகாரளித்திருக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க