செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!

post image

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது. இதற்கு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் அந்நிய நிதி வரத்தும் துணைபுரிந்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.61 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.45 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64-ஆக முடிந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ரிசர்வ் வங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

பொதுத்துறை வங்கி குறியீடு 2% உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.5 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து 7,210 புள்ளிகளாக நிலைபெற்றது. ஜூன் 6 அன்... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

மும்பை: உலக சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் 50 அடிப்படை புள்ளிகள் வீதக் குறைப்புக்குப் பிறகு முதலீட்டாளர்களின் உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் கு... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று(ஜூன் 9) காலையில் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669-இல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10-இல் வர... மேலும் பார்க்க

ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!

புது தில்லி: நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவி அமர்த்தப்படுவதாக இந்திய ஆயுள் காப்பீட்ட... மேலும் பார்க்க

சைஃப்கோ சிமென்ட்ஸின் 60% பங்குகளை கைபற்றிய ஜே.கே சிமென்ட்!

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமென்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமென்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்... மேலும் பார்க்க

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை குறைந்தது!!

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குற... மேலும் பார்க்க