செய்திகள் :

பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!

post image

மும்பை: உலக சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் மற்றும் ரிசர்வ் வங்கியின் 50 அடிப்படை புள்ளிகள் வீதக் குறைப்புக்குப் பிறகு முதலீட்டாளர்களின் உற்சாகமான மனநிலையைத் தொடர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669 ஆக இருந்தது. பிறகு வங்கிப் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதையடுத்து, 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 256.22 புள்ளிகள் உயர்ந்து 82,445.21 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 100.15 புள்ளிகள் உயர்ந்து 25,103.20 ஆக நிலைபெற்றது.

அதே வேளையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய சுற்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையும் சந்தைகளை உயர்த்தியது.

சென்செக்ஸில் கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் நிதி, ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்து இருந்த நிலையில் எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஜியோ ஃபைனான்சியல், டிரென்ட் ஆகியவை உயர்ந்தும் ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெனி, எம்&எம், அதானி போர்ட்ஸ், எடர்னல் ஆகியவை சரிந்தும் முடிந்தன.

பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் முந்தைய அமர்வில் ரூ.451.13 லட்சம் கோடியிலிருந்து ரூ.455.11 லட்சம் கோடியாக அதிகரித்ததால் முதலீட்டாளர்களின் சொத்து ரூ.3.9 லட்சம் கோடி லட்சம் கோடியாக உயர்ந்தது.

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, ஹூண்டாய் மோட்டார், இன்டர்குளோப் ஏவியேஷன், பேங்க் ஆஃப் இந்தியா, முத்தூட் ஃபைனான்ஸ், லாரஸ் லேப்ஸ், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, நுவாமா வெல்த், எச்டிஎஃப்சி ஏஎம்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், அஸ்ட்ராஜெனெகா பார்மா, எஸ்பிஐ கார்டுகள், சிட்டி யூனியன் வங்கி, நிப்பான் லைஃப், எல்டி ஃபைனான்ஸ், அனுபம் ரசாயனன், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், எஸ்ஆர்எஃப் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவுடன் வர்த்தகமான நிலையில் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.1,009.71 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.30 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $66.67 ஆக உள்ளது.

இதையும் படிக்க: ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 85.64 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.85.64 ஆக நிறைவடைந்தது. இதற்கு உள்நாட்டு பங்குச் சந்தைகளில் உறுதியான போக்கு மற்றும் அந்நிய நிதி வரத்து... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கி குறியீடு 2% உயர்வு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.5 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து 7,210 புள்ளிகளாக நிலைபெற்றது. ஜூன் 6 அன்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம்!

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று(ஜூன் 9) காலையில் 480.01 புள்ளிகள் உயர்ந்து 82,669-இல் தொடங்கி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 157.05 புள்ளிகள் உயர்ந்து 25,160.10-இல் வர... மேலும் பார்க்க

ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!

புது தில்லி: நிதி துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் கூடுதல் பொறுப்பாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பதவி அமர்த்தப்படுவதாக இந்திய ஆயுள் காப்பீட்ட... மேலும் பார்க்க

சைஃப்கோ சிமென்ட்ஸின் 60% பங்குகளை கைபற்றிய ஜே.கே சிமென்ட்!

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமென்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமென்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்... மேலும் பார்க்க

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை குறைந்தது!!

சென்னை: சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,200 குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஜூன் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.150 குற... மேலும் பார்க்க