செய்திகள் :

கரோனா: பீதியடைய வேண்டாம், விழிப்புடன் இருப்போம் - மமதா

post image

மேற்கு வங்கத்தில் கரோனா நிலைமையைக் குறித்து பீதியடைய வேண்டாம், ஆனால் விழிப்புடன் இருக்குமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸின் மற்றொரு வெடிப்பைச் சமாளிக்க மாநிலத்தில் தயார் நிலையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் தலைமை தாங்கினார் மமதா பானர்ஜி.

இதுதொடர்பாக மமதா பானர்ஜி கூறுகையில்,

மாநிலத்தில் கரோனா நிலைமை குறித்து மக்கள் பீதியடைய எந்த காரணமும் இல்லை. ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கரோனா பாதிப்பு குறித்து தயார் நிலையை நாங்கள் கணக்கெடுத்தோம். தொற்று ஒருபோதும் மீண்டும் வராது என்று நம்புகிறோம். மக்கள் பீதியை உருவாக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நுரையீரல், மார்பு தொடர்பான தொற்று அல்லது வேறு சில பிரச்னைகள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் வயது மூப்பும் ஒரு பிரச்னையாகலாம்.

இப்போதெல்லாம், இருமல், சளி ஏற்பட்டாலும், கரோனா என்று கருதத் தொடங்குகிறோம். அரசு மக்களுடன் உள்ளது, தொடர்ந்து இருக்கும், அரசு நடத்தும் மருத்துவமனைகளில் தேவையான உள்கட்டமைப்புகள் உள்ளன. நிலைமை மோசமாக இல்லாததால் நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது ஒரு வகையான இன்ஃப்ளூயன்ஸாவைத் தவிர வேறில்லை. மழைக்காலம், குளிர்காலத்தில் இருமல் சளி இருப்பதை நாங்கள் காண்கிறோம், இது மிகவும் பொதுவானது என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள், கொல்கத்தா நகராட்சி உள்பட குடிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்படி, மேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை காலை வரை 747 செயலில் உள்ளனர். ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடம... மேலும் பார்க்க

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழு... மேலும் பார்க்க

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க