செய்திகள் :

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

post image

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஜூன் 7 ஆம் தேதி புறப்பட்ட நிலையில், மும்பை துறைமுகத்துக்கு சென்றுகொண்டிருந்தது.

சுமார் 270 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் 22 பணியாளர்கள் இருந்த நிலையில், கொச்சியில் இருந்து 315 கி.மீ. தொலைவிலும் கோழிக்கோடு பேபூரில் இருந்து 70 கடல் மைல் தொலைவிலும் சென்றுகொண்டிருந்த போது, இன்று காலை 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்த அனைவரும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் 18 பேரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். அவர்களில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 4 கப்பல் ஊழியர்களை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மீட்புப் பணிகளுக்காக ஐஎன்எஸ் சூரத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐஎன்எஸ் கருடாவில் இருந்து டோர்னியர் விமானமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், பலத்த காற்று வீசியதன் காரணமாக, அரபிக் கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த எரிபொருள் அடங்கிய கன்டெய்னர்களும் கடலில் மூழ்கிய நிலையில், மாநிலம் தழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

கரோனா: பீதியடைய வேண்டாம், விழிப்புடன் இருப்போம் - மமதா

மேற்கு வங்கத்தில் கரோனா நிலைமையைக் குறித்து பீதியடைய வேண்டாம், ஆனால் விழிப்புடன் இருக்குமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மற்றொரு வெடிப்பைச் சமாளிக்க மாநிலத்தில் தய... மேலும் பார்க்க

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடம... மேலும் பார்க்க

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க

ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசால் சேதம்: கார்கே

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்கு மோடி அரசாங்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.பிர... மேலும் பார்க்க