செய்திகள் :

ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா.செ., ஸ்டாலின்

post image

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான மோதல் பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தின.

அத்துடன் இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸைச் சந்தித்ததும் பேசு பொருளானது.

விரைவில் இருவரது மோதலுக்குச் சுபம் போடப்படும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.

அன்புமணி - ராமதாஸ் இணைவதற்கு நடந்த யாக பூஜை
அன்புமணி - ராமதாஸ் இணைவதற்கு நடந்த யாக பூஜை

இந்தச் சூழலில் பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின் நவக்கிரக்கோயில்களில் ஒன்றான கும்பகோணம் சூரியனார்கோவில் கிராமத்திலுள்ள, சிவசூரியபெருமான் கோவிலில் ராமதாஸும் - அன்புமணியும் இணைவதற்கும், ஒற்றுமையுடன் இருப்பதற்கும் மங்கள ஆதித்ய மகா யாகம் நடத்தியிருப்பது பா.ம.க வட்டத்தில் பேசிப் பொருளாகியிருக்கிறது.

ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் கோயிலுக்கு வந்தனர். பின்னர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்த யாக பூஜையில் அமர்ந்து பூஜை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களைக் கொண்டு இந்தச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பிரகாரத்தில் வலம் வந்து மூலவர் சிவசூரியபெருமான் உள்ளிட்ட நவக்கிரகங்களுக்குக் கலசங்களிலிருந்த புனித நீரில் சிறப்பு அபிஷேகம் செய்து மகா ஆரத்தி செய்யப்பட்டது.

இந்த வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் சேர்ந்து சண்டை சச்சரவு நீங்கி ஒற்றுமையுடன் இருப்பார்கள் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

யாக பூஜையில் பா.ம.க மா.செ,ஸ்டாலின்
யாக பூஜையில் பா.ம.க மா.செ,ஸ்டாலின்

இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது, "ஆதித்ய ஹோமம் என்பது சவால்களை வெல்லலாம் மற்றும் சூரிய கடவுளின் கதிரியக்கச் சக்திகளால் வழிநடத்தப்பட்டு ஆன்மீக விடுதலை நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.

இதனால், ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் இடையே சுமுக நிலை ஏற்படவும், தமிழகத்தில் பா.ம.க வலுப்பெற்று தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இது மிகப்பெரிய மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கை பா.ம.க-வினர் மத்தியில் உள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்... மேலும் பார்க்க

`விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு.. நான் சம்பந்தப்பட்டிருந்தேனா?’ - தவெகவில் இணைந்த முன்னாள் IRS அருண்ராஜ்

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் இன்று விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அருண் ராஜ் - TVK தவெகவில் இணைந்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இது எனக்கு ரொம்பவே சந்தோஷ... மேலும் பார்க்க

TVK : 'முன்னாள் MLA-க்கள்; விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி! - தவெகவில் இணைந்தோர் யார் யார்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று திமுக, அதிமுக சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரும் விஜய்யின் முன்னிலையில் இணைந்திருக்கின்றனர்.TVK Vijayஇந்த இணைப்பு விழா... மேலும் பார்க்க