செய்திகள் :

"கேரளா மக்களுக்கு பெருமை" - உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!

post image

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. 399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் 24.346 டி.இ.யூ கண்டெய்னர்களை சுமந்துசெல்லும் திறன் படைத்தது. 4 புட் பால் கிரவுண்ட்களைவிட அதிக பரப்பளவுகொண்டது. இந்த கப்பல் 2023-ல் கட்டப்பட்டதாகும். விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பட தொடங்கிய பிறகு துறைமுகத்துக்கு வந்துள்ள 347-வது கப்பலாகும். கப்பலில் 35 ஊழியர்கள் உள்ளனர். இந்த கப்பலில் இப்போது 16,000 கண்டெய்னர்கள் உள்ளன. அதில் 3000 கண்டெய்னர்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, "உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து சரக்குப் பெட்டக மாற்றுமுனையத்தின் அதிமுக்கிய மையமாக விழிஞ்ஞம் துறைமுகம் மாறி உள்ளது. நாட்டின் முதல் டிரான்ஸ்ஷிப்மெண்ட் துறைமுகமான விழிஞ்ஞம் திறக்கப்பட்டு ஒருமாதத்துக்கு பிறகு உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இங்கு வந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலுக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு

இக்கப்பல் தெற்காசியாவில் முதன் முறையாக விழிஞ்ஞம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது கேரளா மக்களுக்கு பெருமையான விஷயமாகும். கப்பல் கேப்டனாக கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த வில்லி ஆன்றணி வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். கப்பல் ஊழியராக கண்ணூரைச் சேர்ந்த அபிநந்த் உள்ளார். உலகின் மிகப்பெரிய கப்பல் வந்ததைத் தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகம் புதிய சரித்திரத்துக்கு சாட்சியாகி உள்ளது" என்றார்.

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு... ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளரை கைதுசெய்க" - பாமக அன்புமணி

மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநரை பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது.... மேலும் பார்க்க

"பழமைவாத கருத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சமூக நல ஆணையரகத்தில் 13 வயது சிறுமி பாலியல் தீண்டல் சம்பவம் தொடர்பாக விடுதி காவலாளியை கைது செய்தது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகள... மேலும் பார்க்க

"தனியார்ப் பேருந்துக்கு ஆதரவாக ஷூ-வால் தாக்கினார்" - மேலாளர் மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் போக்குவரத்து கிளையிலிருந்து திருப்பூர்-மதுரை சிறப்புப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.இந்தப் பேருந்தை ஓட்டுநர் கணேசன் இயக்கினார். மதுரை ஆரப்பாளையம் பேருந்த... மேலும் பார்க்க

Amit shah: "இதை விவாதிக்கத் துணிச்சல் இருக்கிறதா?" - ஆ.ராசாவிற்கு தமிழிசை சவால்; பின்னணி என்ன?

நேற்று (ஜூன் 8) மதுரையில் நடந்த தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "முருகன் மாநாடுவரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது.1000 ஆண்டுகள் பழைமையான முருகன் ... மேலும் பார்க்க

"தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு"- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? - சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடி... மேலும் பார்க்க