செய்திகள் :

"தனியார்ப் பேருந்துக்கு ஆதரவாக ஷூ-வால் தாக்கினார்" - மேலாளர் மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் புகார்

post image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் போக்குவரத்து கிளையிலிருந்து திருப்பூர்-மதுரை சிறப்புப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.

இந்தப் பேருந்தை ஓட்டுநர் கணேசன் இயக்கினார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட நிலையில், அந்தப் பேருந்து நிலையத்தின் உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும், ஓட்டுநர் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து ஓட்டுநர் கணேசனை ஷூ-வால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, உதவி மேலாளர் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கும் மேலாளர்
அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கும் மேலாளர்

இந்நிலையில், உதவி மேலாளர் தாக்கியதால் காயமடைந்த ஓட்டுநர் கணேசன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, திருப்பூரில் இருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றேன்.

பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருந்ததால், என்னால் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியவில்லை.

அதனால், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தை நிறுத்தினேன். எனது பேருந்தைப் பார்த்த பயணிகள் அதில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

என் பேருந்துக்குப் பின்னால் அதிகமான தனியார்ப் பேருந்துகள் நின்றன. அப்போது, அங்கு வந்த உதவி மேலாளர் மாரிமுத்து தனியார்ப் பேருந்துகளுக்கு ஆதரவாகப் பயணிகளை இறக்கிவிடுமாறு தகாத வார்த்தைகளால் என்னைப் பேசினார்.

அத்துடன், நடத்துநரிடம் இருந்து இன்வாய்ஸை வாங்கிச் சென்றுவிட்டார்.

ஓட்டுநர் கணேசன்
ஓட்டுநர் கணேசன்

அந்த இன்வாய்ஸை வாங்க நானும், நடத்துநரும் சென்றோம். அவரது அலுவலகத்தில் வைத்து மீண்டும் என்னைத் தகாத வார்த்தைகளால் உதவி மேலாளர் மாரிமுத்து திட்டினார். அதற்கு நான் மரியாதையாகப் பேசுங்கள் என்றேன்.

அப்போது, உனக்கெல்லாம் நான் மரியாதை தர வேண்டுமா? எனக் கூறி, அவர் அணிந்திருந்த ஷூ-வைக் கழற்றி என்னைத் தாக்கத் தொடங்கினார். வயதான தொழிலாளி என்றும் பாராமல் ஷூவை கொண்டு என்னை அடித்த அவர் மீது துறைரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில், ஓட்டுநர் கணேசனைத் தாக்கிய உதவி மேலாளரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு... ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளரை கைதுசெய்க" - பாமக அன்புமணி

மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநரை பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது.... மேலும் பார்க்க

"பழமைவாத கருத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சமூக நல ஆணையரகத்தில் 13 வயது சிறுமி பாலியல் தீண்டல் சம்பவம் தொடர்பாக விடுதி காவலாளியை கைது செய்தது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகள... மேலும் பார்க்க

"கேரளா மக்களுக்கு பெருமை" - உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட... மேலும் பார்க்க

Amit shah: "இதை விவாதிக்கத் துணிச்சல் இருக்கிறதா?" - ஆ.ராசாவிற்கு தமிழிசை சவால்; பின்னணி என்ன?

நேற்று (ஜூன் 8) மதுரையில் நடந்த தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "முருகன் மாநாடுவரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது.1000 ஆண்டுகள் பழைமையான முருகன் ... மேலும் பார்க்க

"தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு"- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? - சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடி... மேலும் பார்க்க