செய்திகள் :

Amit shah: "இதை விவாதிக்கத் துணிச்சல் இருக்கிறதா?" - ஆ.ராசாவிற்கு தமிழிசை சவால்; பின்னணி என்ன?

post image

நேற்று (ஜூன் 8) மதுரையில் நடந்த தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "முருகன் மாநாடு வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறுகிறது.

1000 ஆண்டுகள் பழைமையான முருகன் கோவிலை சிக்கந்தர் மலை எனக் கூறுவதற்கு திமுக அரசுக்குத் துணிச்சல் வந்துள்ளது. வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டில் கலந்து கொண்டு நமது வலிமையைக் காட்ட வேண்டும்" என்று பேசியிருந்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

மேலும், "திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசாகும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றியதாகக் கூறுகிறார்கள். தைரியமிருந்தால் வாக்குறுதிப் பட்டியலை எடுத்துவந்து, நிறைவேற்றிய திட்டங்களைக் காட்டுங்கள்." என்று

"தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு"- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

ஆ. ராசா
ஆ. ராசா

நாங்கள் சொன்னதை 98.5 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம்

அமித்ஷாவின் இந்தப் பேச்சு குறித்து திமுக எம்.பி ஆ.ராசா, "நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ஐந்து முறை தமிழகத்திற்கு வந்தார். ஆனால், அவர்கள் ஏன் வெற்றி பெறவில்லை. தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொன்னதை 98.5 சதவீதம் நிறைவேற்றியிருக்கிறோம்.

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மட்டும் நிலுவையில் உள்ளது. அதனைச் செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து விவாதிக்க அமித்ஷாவை நான் அழைக்கிறேன்.

அமித்ஷாவிற்கு ஆ.ராசா சவால்

நாங்கள் செய்த அனைத்து திட்டங்களையும் ஆதாரத்துடன் காண்பிக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித்ஷா தயாரா? டெல்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரிலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், இந்தியில் மட்டும் பேசாதீர்கள்" என்று பேசியிருந்தார்.

அமித்ஷாவை ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்துச் சவால் விடுத்தது குறித்துப் பதில் சவால் விட்டிருக்கும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "ராசா அவர்களே... வாக்குறுதி தொடர்பாக... தமிழக மக்களின் மனதைத்தான் மரியாதைக்குரிய அமித்ஷா அவர்கள் பிரதிபலித்தார்கள்...

முதலில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு திகாரில் இருந்த உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனாலும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு முன்னால் உங்கள் மனசாட்சியோடு விவாதியுங்கள்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

விவாதிக்க உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?

நீட் பரீட்சையை நீக்க முடியாது என்று தெரிந்தும் அப்பட்டமாக முதல் கையெழுத்து என்று பொய் சொன்னீர்களே.. முதலில் அதை விவாதியுங்கள்.

அடுத்து உங்கள் விவாதங்களை டாஸ்மாக் வாசலில் வைத்துக் கொள்ளுங்கள். டாஸ்மாக் கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்று முதல்வர் தன் வீட்டிற்கு முன்னால் ஏன் நின்று கறுப்புக்கொடி ஏந்தினார். அது என்ன ஆனது என்று விவாதியுங்கள்.

உங்கள் விவாதத்திற்குப் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் சென்று அதை விவாதிக்க உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?

ஒப்பந்தத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர்கள் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள் என்று அந்த வாக்குறுதிகளை வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அவர்களிடம் சென்று உங்களால் விவாதிக்க முடியுமா...

2026 இல் தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருங்கள்

மாணவர்களுக்குக் கல்விக் கடன் ரத்து என்று சொன்ன வாக்குறுதிக்காக மாணவரிடம் சென்று முதலில் விவாதியுங்கள்.... பழைய ஓய்வூதியம் திட்டம் கொண்டு வருவேன் என்று நீங்கள் ஏமாற்றிய அரசு ஊழியர்களிடம் சென்று முதலில் அதைப் பற்றி விவாதிகள்....

நீங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் பொய் சொல்லித் திரிகிறீர்கள் என்று தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும்... 2026 இல் தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருங்கள்..." என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆ.ராசாவின் சாவலுக்குப் பதிலளித்திருக்கிறார் தமிழிசை செளந்தரராஜன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு... ஓட்டுநரை காலணியால் அடித்த மேலாளரை கைதுசெய்க" - பாமக அன்புமணி

மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநரை பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது.... மேலும் பார்க்க

"பழமைவாத கருத்தை அமைச்சர் கீதா ஜீவன் ஆதரிக்கிறாரா?" - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சமூக நல ஆணையரகத்தில் 13 வயது சிறுமி பாலியல் தீண்டல் சம்பவம் தொடர்பாக விடுதி காவலாளியை கைது செய்தது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகள... மேலும் பார்க்க

"கேரளா மக்களுக்கு பெருமை" - உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட... மேலும் பார்க்க

"தனியார்ப் பேருந்துக்கு ஆதரவாக ஷூ-வால் தாக்கினார்" - மேலாளர் மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் போக்குவரத்து கிளையிலிருந்து திருப்பூர்-மதுரை சிறப்புப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.இந்தப் பேருந்தை ஓட்டுநர் கணேசன் இயக்கினார். மதுரை ஆரப்பாளையம் பேருந்த... மேலும் பார்க்க

"தமிழ் கடவுள் முருகன் ஏமாற மாட்டார்; டெல்லி வேறு, தமிழ்நாடு வேறு"- அமித் ஷா பேச்சுக்கு திருமா பதில்

நேற்று (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? - சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடி... மேலும் பார்க்க