செய்திகள் :

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை

post image

பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, "இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தில் பிரிவு 66-ல் என்னென்ன பணிகளுக்கு கோயிலின் உபரி நிதியை செலவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ராம ரவிக்குமார்

அதன்படி இந்து தர்மத்தை வளர்க்கவும், இந்து ஆகம விதிகளை கற்றுக் கொடுக்கவும், அருகிலுள்ள நலிவடைந்த கோயிலுக்கு செலவு செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயிலின் நிதியை எப்படி காலி செய்வது என யோசித்து, கோயிலில் உள்ள உபரி நிதிகளை எடுத்து ஆங்காங்கே திருமண மண்டபம், ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அதன்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களில் சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு கையிருப்பை கரைக்க முடிவு செய்தனர்.

மேற்படி அரசானையின்படி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிதியிலிருந்து ரூ. 6 கோடியே 30 லட்சம் பணத்தை எடுத்து கள்ளிமந்தயம் சாலையில் உள்ள பெருமாள் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிஅரசர் அமர்வு இதுபோன்று கோயில் நிதியை தவறாக செலவு செய்யக்கூடாது எனவும், நிதி இருக்கிறது என்பதற்காக திருமண மண்டபம் கட்டுவது போல் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும் தெளிவாக உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

மேற்படி உத்தரவுகளின்படி, மேற்படி அரசாணையை எதிர்த்து இந்து தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் நீதி அரசர்கள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் மேற்படி அரசாணைக்கு தடைவிதித்ததோடு மூன்று வாரங்களுக்கு வழக்கை தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா.செ., ஸ்டாலின்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணி ஆகியோருக்கு இடையேயான மோதல் பா.ம.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.தந்தை, மகன் இடையே ஏற்பட்ட வெளிப்படையான உரசல் பா.ம.க முதற்கட்ட நிர்வாகிகள்... மேலும் பார்க்க

`விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு.. நான் சம்பந்தப்பட்டிருந்தேனா?’ - தவெகவில் இணைந்த முன்னாள் IRS அருண்ராஜ்

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் இன்று விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அருண் ராஜ் - TVK தவெகவில் இணைந்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இது எனக்கு ரொம்பவே சந்தோஷ... மேலும் பார்க்க

TVK : 'முன்னாள் MLA-க்கள்; விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி! - தவெகவில் இணைந்தோர் யார் யார்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று திமுக, அதிமுக சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரும் விஜய்யின் முன்னிலையில் இணைந்திருக்கின்றனர்.TVK Vijayஇந்த இணைப்பு விழா... மேலும் பார்க்க

'மோடியும், அமித் ஷாவும் தமிழகத்துக்கு வர வர... திமுக வாக்குகள் அதிகரிக்கும்' - ஆ.ராசா சொல்வது என்ன?

திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமானஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் ... மேலும் பார்க்க

TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருப்பதாக கூறுகிறார்கள். அருண் ராஜ் சேலத்தை சேர்ந்தவர். மருத்துவம் பயின்றவர். கிருஷ்ணகிரியில் 5 ஆண்டுகள்... மேலும் பார்க்க

பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள்; நான் உளமாற தூக்கிப் பிடிக்கிறேன்- சீமான்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.எஃப் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் சக்திவேல் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர்... மேலும் பார்க்க