செய்திகள் :

சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?

post image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி எடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

பழைய வீடியோவாக இருந்தாலும், வழக்கின் தீவிரத்தன்மைக் கருதி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் மாவட்ட எஸ்.பி ஷ்ரேயா குப்தா. அதன்படி, சிறுவர் நீதிச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணையில் இறங்கினர்.

கைது

புலன் விசாரணையில், அத்னான் என்ற 20 வயது இளைஞன், சிறுவனை புகைக்க வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அத்னானை கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அசாருதீன், திருப்பதி ஆகிய 2 போலீஸ்காரர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர்கள் அசாருதீன், திருப்பதி இருவருமே 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான். இதில் அசாருதீனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவருக்குமிடையே முன்பகை இருந்துவருகிறது.

இந்த நிலையில்தான் இப்ராஹிமை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் திட்டத்துடன் 2 போலீஸ்காரர்களும் அத்னான் மூலமாக சிறுவனை புகைப்பிடிக்க செய்து வீடியோ எடுத்திருக்கின்றனர்.

சஸ்பெண்ட்

அந்த வீடியோவை பரப்பி, `தனது பகையாளி இப்ராஹிம்தான் சிறுவர்களை புகைக்கச் செய்தான்’ என பரப்பிவிட்டிருக்கின்றனர். ஆனால், புலன் விசாரணையில் சதித் திட்டம் தெரியவந்ததையடுத்து, அத்னான் கைதுசெய்யப்பட்டார். அவரைத் தூண்டிவிட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போலீஸ்காரர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் பாலியல் புகார்... புதுச்சேரிக்கு தப்பிஓடிய ஆம்பூர் அர்ச்சகர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஒரு திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், தியாகராஜன் மீது திருமணமாகாத 2... மேலும் பார்க்க

`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?

திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!

சதுப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்து... மேலும் பார்க்க

நெல்லை: `சாமக்கொடையில் மண்டையோடு, எலும்புடன் சாமி ஆட்டம்..' பரவிய வீடியோ - 5 பேர் மீது வழக்கு பதிவு

நள்ளிரவில் நடக்கும் சாமக் கொடையின்போது மயானத்துக்குச் சென்று திரும்பிய சாமியாடிகள் மனித எலும்புகளை கையில் ஏந்தியபடி வந்து சாமியாடிய விவகாரம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.நெல்லை மாவட்டம் வீரவநல... மேலும் பார்க்க