அணியை கேப்டனாக வழிநடத்துவது மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து; ஹாரி ப்ரூக் காட்டில் வெற்றி மழை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இதையும் படிக்க:டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி பிரிஸ்டாலில் நேற்று (ஜூன் 8) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகிய பிறகு அணியின் புதிய கேப்டனாக ஹாரி ப்ரூக் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. 11 நாள்கள் இடைவெளியில் ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி இரண்டு தொடர்களை வென்று அசத்தியுள்ளது.
இதையும் படிக்க: நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீரர் பாராட்டு!
இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூன் 10) சௌத்தாம்டானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.