செய்திகள் :

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்? - ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்!

post image

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று(திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் தற்போது தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மாற்றியது முதலே பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னைக்குள் இருந்து புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் செல்வதே பயணிகளுக்கு மிகுந்த அவதியாக இருந்து வருகிறது. அதன்பிறகு அவர்கள் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இதனால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி கடந்த வாரம் பயணிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்ரீத் விடுமுறையையொட்டி கடந்த சில நாள்களாக ஊருக்குச் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பலரும் பேருந்து கிடைக்காமல் தவித்ததாக புகார் கூறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

முன்னதாக பக்ரீத் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை விளக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | என்ன பயம்? சிரிப்புதான் வருகிறது; அமித் ஷாவும் மோடியும் சாதாரணமான ஆள்கள்: ஆ. இராசா

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலை பரவலாக வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்... மேலும் பார்க்க

திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரகுபதி

திமுக அரசைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி ... மேலும் பார்க்க