செய்திகள் :

பாலியல் ‘சார்’-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

post image

சென்னை: சென்னை தாம்பரம் அருகேயுள்ளதொரு அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியொருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூன் 9) கூறியிருப்பதாவது:

அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் ’அவுட் ஆஃப் கண்ட்ரோல்(கட்டுப்பாட்டை மீறி)’ இருக்கும் பாலியல் "சார்"-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்?

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்? - ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்!

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று(திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்... மேலும் பார்க்க

அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம்: அமைச்சர் கீதா ஜீவன்

பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப்படுவர் என சமூக நலன் - மகளிர் உரிமைத் துறைஅமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வ... மேலும் பார்க்க

தவெகவில் திமுக, அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள்! யார்யார்?

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று இணைந்துள்ளனர்.வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கட்சியை தொகுதிவாரி... மேலும் பார்க்க

தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வ... மேலும் பார்க்க

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி குறித்த... மேலும் பார்க்க