செய்திகள் :

அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம்: அமைச்சர் கீதா ஜீவன்

post image

பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப்படுவர் என சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சமூக நல ஆணையரகத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொந்தரவு சம்பவம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில்,

"சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய அரசு சேவை இல்லத்தில் தேவைக்கேற்ப குழந்தைகள் அதில் தங்கி கல்வி பயின்றும் தொழில் பயிற்சி மேற்கொண்டும் வருகிறார்கள். குறிப்பாக அந்த தங்கும் விடுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்து நாங்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரித்து பின்னர் அவரது தாயாரை நேரில் சென்று சந்தித்தோம்.

சிறுமியின் தாயார், சிறுமியின் பெயர், முகவரி, அடையாளம் குறித்து எதுவும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உரிய புகார் அளிக்கப்பட்டு புகாரின் அதன் அடிப்படையில் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் காவலாளியை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆண் காவலர்களுக்கு பதிலாக பெண் காவலர்கள் மூன்று பேர் நியமனம் செய்ய உள்ளோம். சமையல் செய்யக்கூடிய நபர் அந்த தங்கும் விடுதியில் இருந்து வெளியில் சென்ற நேரத்தில் காவலாளி உள்ளே புகுந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் கூடுதலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்.

மேலும் விடுதிக்கென தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவார்கள்.

இதுவரையில் கைது செய்யப்பட்ட காவலாளி குறித்து எந்த ஒரு புகாரும் வராத நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டிருப்பது குறித்து தீவிர விசாரணை துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரையில் 138 பிள்ளைகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வேற எந்த சிறுமியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் தற்பொழுது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் உள்ளார். இதுவரை இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை. இனிமேல் இது போன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும். எனவே, மாணவிகளோ சிறுமிகளோ எந்த ஒரு அச்சமும் இன்றி இங்கு வந்து தங்கலாம்.

திருப்பூர் சம்பவம் தொடர்ந்து இரவு தங்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக பெண் ஒருவர் எப்பொழுதும் இருக்குமாறும் அதேபோல் பெண் பிள்ளைகளை பார்க்க வருகை புரியக் கூடியவர்களின் வருகை பதிவேட்டையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிராக தண்டனைகளை மிகவும் கடினமாக மாற்றியமைத்துள்ளோம்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறையின் மூலமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தங்கி உள்ள பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை பொருட்டு பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

குறிப்பாக இந்த சம்பவத்தன்று வார்டன் விடுப்பில் சென்றுள்ள காரணத்தினால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாகவும் வார்டன் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளோம். துறைகள் ரீதியாக மக்கள் புகார் தெரிவிக்க கூடிய அழைப்புகள் அதிகரித்துள்ளது.

சிறுவயதிலேயே திருமணம், சிறு வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு வழங்குவதற்கு துறை ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | என்ன பயம்? சிரிப்புதான் வருகிறது; அமித் ஷாவும் மோடியும் சாதாரணமான ஆள்கள்: ஆ. இராசா

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலை பரவலாக வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்... மேலும் பார்க்க

திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரகுபதி

திமுக அரசைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி ... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள்? - ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்!

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று(திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார். சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதா... மேலும் பார்க்க