செய்திகள் :

கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

post image

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது.

650க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் உடன் கொழும்பிலிருந்து மும்பை நோக்கி இந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்ததாக கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் அடையாளம் காணப்பட்ட அந்த கப்பலில் இருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக பேரிடர் மேலாண்மை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கப்பலில் இருக்கும் பணியாளர்களை காப்பாற்றும் முயற்சியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிக்கு பிறகு காயம் அடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க கண்ணூர், கோழிக்கோடு மற்றும் கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் குறித்தும் மீட்பு நடவடிக்கைகளின் துரிதம் குறித்தும் இன்னும் உறுதிப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கடலோர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன கொள்கலன்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோழிக்கோடு கப்பல் விபத்து: தானாகத் தீப்பிடிக்கும் ரசாயனங்கள்; அதிகாரிகள் சொல்வது என்ன?

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற வாங் ஹை 506 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு பேப்பூர் துறைமுகத்திலிருந்து 78 நாட்டிக்கல் மைல் தொலைவில் இன்று காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.அப்ப... மேலும் பார்க்க

ரயில் கிளம்பிய போது ஓடி வந்து ஏற முயன்ற இளம்பெண்; தவறியதால் கால் துண்டான பரிதாபம்..

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நீலா (வயது: 27). இவர், நேற்று (ஜூன்-8) மதியம் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் - 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் வாசலில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கார் - வேன் மோதல்; ஐ.டி. ஊழியர், 13 வயது சிறுமி பலியான சோகம்; என்ன நடந்தது?

கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், வேன் ஒன்றில் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்க... மேலும் பார்க்க

Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்துவமனையில் விமானி

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித தளத்துக்குச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி சிக்கலான சாலையில் ஆபத்தான முறையில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

மும்பை: மலை பயணம்; 40 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த கார்.. 3 பேர் உடல்கள் மீட்பு - நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்த பிரவின்(27), யாக்னேஷ்(27), ராஜ்போலி ஆகியோர் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் சிவன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோத... மேலும் பார்க்க