செய்திகள் :

ரயில் கிளம்பிய போது ஓடி வந்து ஏற முயன்ற இளம்பெண்; தவறியதால் கால் துண்டான பரிதாபம்..

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நீலா (வயது: 27). இவர், நேற்று (ஜூன்-8) மதியம் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலில், திருச்சி வரை பயணம் செய்து வந்தார்.

ரயில் மாலை 4.30 மணி அளவில், குளித்தலை ரயில் நிலையம் வந்தபோது குடிநீர் பிடிப்பதற்காக இறங்கி பிளாட்பார்மில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, திடீரென ரயில் கிளம்பியதால், பதறிய நீலா ஓடும் ரயிலில் மீண்டும் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து ரயிலின் சக்கரத்தில் அவரது வலது கால் சிக்கி துண்டானது.

neela

வலியில் துடித்த அந்த பெண்ணை அங்கு பணியில் இருந்த ரயில்வே நிலைய அதிகாரிகள் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

மேலும், முதலுதவி சிகிச்சை முடித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் நீலா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குளித்தலை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் முன்னர், ரயில்வே நிலைய பணியாளர்கள் முறையாக முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாததே இந்த விபத்துக்கான காரணம் என அங்குள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் ஒருவர் கிளம்பிய ரயிலில் எற முயன்று விபத்துக்குள்ளாகி வலது காலை இழந்துள்ள சம்பவம், அவரது உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர்கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது. 650... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் ரயிலில் படியில் தொங்கியபடி பயணம் - 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் அடிக்கடி ரயிலில் வாசலில் நின்று பயணம் செய்பவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அத... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கார் - வேன் மோதல்; ஐ.டி. ஊழியர், 13 வயது சிறுமி பலியான சோகம்; என்ன நடந்தது?

கடலூர் மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், வேன் ஒன்றில் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.இவர்களைத் தொடர்ந்து கீழக்கரையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்க... மேலும் பார்க்க

Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்துவமனையில் விமானி

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் புனித தளத்துக்குச் சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி சிக்கலான சாலையில் ஆபத்தான முறையில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு... மேலும் பார்க்க

மும்பை: மலை பயணம்; 40 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த கார்.. 3 பேர் உடல்கள் மீட்பு - நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்த பிரவின்(27), யாக்னேஷ்(27), ராஜ்போலி ஆகியோர் நாசிக் அருகில் உள்ள திரிம்பகேஷ்வர் சிவன் கோயிலுக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோத... மேலும் பார்க்க

Shine Tom Chacko : விபத்தில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ... தந்தை உயிரிழந்த சோகம்

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர், சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியி... மேலும் பார்க்க