செய்திகள் :

`அப்பா, நான் பிரபலமாக போகிறேன்' - 19 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்த Dusting Challenge Trend

post image

அமெரிக்காவின் அரிஜோனா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரென்னா ஓ ரூர்க் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக அவர் செய்த டஸ்டிங் சவால் (dusting challenge) அவரின் உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dusting Challenge

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலமாவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்காகவும் அதிக பார்வையாளர்களை பெறுவதற்காகவும் அவர்கள் பல்வேறு சவால்களை செய்யவும் துணிகின்றனர். அந்த வகையில் செய்யப்படும் ஒரு ஆபத்தான சவால் தான் `டஸ்டிங் சவால்’.

இது குரோமிங் அல்லது ஹஃபிங் என்றும் கூறப்படும். இது வீடு சுத்தம் செய்யும் பொருட்களை உள் இழுப்பதை உள்ளடக்கிய ஒரு வைரல் ட்ரெண்ட் ஆகும். இதைத்தான் ரென்னாவும் முயற்சித்திருக்கிறார்.

ரென்னா கீபோர்ட் சுத்தம் செய்யும் ஸ்ஃபிரேவை உள்ளிழுக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் , கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு மூளை சாவு ஏற்பட, உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து ரென்னாவின் தந்தை ஆரோன் ஓ ரூர்க், ``எங்களது மகள் எப்போதும் `நான் பிரபலமாக போகிறேன் அப்பா. நீங்கள் பாருங்கள். நான் நிச்சயம் ஒரு நாள் பிரபலமாவேன்’ என்று கூறிக் கொண்டே இருப்பாள், ஆனால் அவளுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டதை எண்ணி வேதனை தெரிவிக்கின்றேன்” என்று கூறினார்.

மேலும், ``எங்களின் மகள் எப்பொழுதும் துடிப்பாகவும் அக்கறை உள்ளவளாகவும் இருப்பாள். பாடுவதை விருப்பமாக கொண்டிருப்பாள். அவளின் புன்னகையாலும் சிரிப்பாலும் வீட்டையே நிரப்புவாள் ' என்று ரென்னா குறித்து அவளது தாய் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய கொடிய சவால்கள் பதின் வயதினரை அதிகம் பாதிக்கின்றது. இதற்கு முன்பு 2024 மார்ச் மாதம் 11 வயது சிறுவன் இத்தகைய ஆபத்தான சவாலின் மூலம் உயிரிழந்துள்ளான்.

இதுபோன்ற சவால்கள் கடுமையான விளைவுகளுக்கு ஆளாக்க கூடும். இது பெரும்பாலும் இதய செயலிழப்பை ஏற்படுத்தும். சமூக ஊடகப் போக்குகள் எவ்வாறு கொடியதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் என்று ரென்னாவின் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் அவளின் பெற்றோர் இதுபோன்ற ஆபத்தான சமூக ஊடகப் போக்குகள் குறித்த விழிப்புணர்வை தாங்கள் ஏற்படுத்தப் போகின்றோம் என்றும் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Google: ``அடுத்துவரும் கூகுளின் தலைவர்..." - வைரலாகும் சுந்தர் பிச்சையின் பேச்சு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அதில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அட... மேலும் பார்க்க

Momos: "சைவ உணவுதான் வேண்டுமென்றால் சைவ உணவகத்தில் ஆர்டர் செய்யலாமே?" - நுகர்வோர் நீதிமன்றம் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாதரைச் சேர்ந்த தம்பதியினர் 'வாவ் மோமோஸ்' கடையிலிருந்து 'ஸ்டீம் டார்ஜிலிங் மோமோ காம்போ'வை ஆர்டர் செய்திருக்கின்றனர். சைவ சிற்றுண்டியை ஆர்டர் செய்த அவர்களுக்கு சிக்கன் மோமோஸ் ஆர... மேலும் பார்க்க

`500 ரூபாய்' - குழப்பத்தை ஏற்படுத்திய யூடியூப் வீடியோ; ``தவறான தகவலை பகிர வேண்டாம்'' - RBI

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200,... மேலும் பார்க்க

Man Mom: மன அழுத்தம்; அணைப்பு... சீன இளம் பெண்களிடம் வைரலாகும் 'ஆண் அம்மா' - அப்படி என்றால் என்ன?

தற்போதைய உணவு கலாசாரம், நுகர்வு கலாசாரம், பொருளாதாரத் தேவைகள் என சமீப காலமாக மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரித்திருக்கிறது. வேலை பளு, காதல் தோல்வி, குடும்ப சூழல் என இளைஞர்கள் இதனால் கடுமையாக பாதிக்... மேலும் பார்க்க

`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' - குற்றவாளிகளை பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி... மேலும் பார்க்க

சென்னை: 'பேசவே முடியாதவர் பாடும் அதிசயம்!' - விழிச்சவால் கொண்ட முதல் ஓதுவார் பிரியவதனா யார்?

சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயிலில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவதானாவுக்கு ஓதுவார் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதைத் தொடர்ந்த அவர் கோயிலில் பாடும் க... மேலும் பார்க்க