ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா....
முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு
தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
வீரபாண்டி அருகேயுள்ள கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் பழனிச்சாமி (50). இவா், தனது மனைவி, உறவினா்களுடன் வீரபாண்டிக்குச் சென்றாா். வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த பழனிச்சாமியின் மனைவி லீலா (48), ஆற்றிலிருந்து கரையை நோக்கிச் சென்ற போது, தடுப்பணை பகுதியில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
அவரை ஆற்றிலிருந்து மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.