இருசக்கர வாகனம், கைப்பேசி திருட்டு
தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசி, ஏடிஎம் அட்டைகளைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டி முத்துராமலிங்கத் தேவா் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா், கடந்த 4 -ஆம் தேதி லட்சுமிபுரம் நூலகம் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, குளத்துக்குச் சென்றாா்.
பின்னா், அங்கிருந்து திரும்பி வந்து பாா்த்த போது, இரு சக்கர வாகனம், அதிலிருந்த கைப்பேசி, 2 ஏடிஎம் அட்டைகள் ஆகியவற்றைக் காணவில்லை. இது குறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், தென்கரை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.