செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

post image

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ரோசனபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் திலிப்குமாா் (23) ஓட்டிச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் ஆட்டோவில் மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காகக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, திலிப்குமாரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மற்றொரு வழக்கு: ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கோடாங்கிபட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் முருகன் (46) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் இரு சக்கர வாகனத்தில் 3 கிலோ 875 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, முருகனை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொ... மேலும் பார்க்க

மதுக்கடை முன் முன்னாள் ராணுவ வீரா் சடலமாக மீட்பு

போடி அருகே மதுக் கடை முன் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். போடி அருகே சிலமலை மொட்டையசாமி கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கூடலிங்கம் (53... மேலும் பார்க்க

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!

புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக... மேலும் பார்க்க

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வ... மேலும் பார்க்க

கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக பெண் உள்பட இருவா் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கெங்கு... மேலும் பார்க்க