Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ரோசனபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் திலிப்குமாா் (23) ஓட்டிச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் ஆட்டோவில் மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காகக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, திலிப்குமாரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தி ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மற்றொரு வழக்கு: ஆண்டிபட்டி-வைகை அணை சாலையில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக கோடாங்கிபட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் முருகன் (46) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தை போலீஸாா் நிறுத்திச் சோதனையிட்டனா். இதில் இரு சக்கர வாகனத்தில் 3 கிலோ 875 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, முருகனை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.